யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் தற்போது ஏற்பட்டுள்ள இரத்தத் தட்டுப்பாட்டைக் கருத்திற் கொண்டு வல்வெட்டித்துறை இரத்ததானச் சங்கம் 88 ஆவது தடவையாக நடாத்திய இரத்ததான முகாம் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (19.07.2026) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்தவங்கிப் பிரிவு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் வல்வெட்டித்துறை இரத்ததானச் சங்கத்தினர், பலாலி ஆரோக்கிய மாதா ஆலயத் தொண்டர்கள் என 14 பேர் பங்கேற்று இரத்ததானப் பணிக்குப் பங்களிப்பு வழங்கினர்.






