யாழ் வடமராட்சி மந்திகை வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக வெள்ளிக்கிழமை (17.04.2026) நடந்த முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார்ச் சைக்கிள் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எதிரெதிரே சென்ற வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் இவ் விபத்து இடம்பெற்றதாகத் தெரியவருகிறது. பருத்தித்துறைப் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





