முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை நினைவுத் தூபியைத் தமிழ்மக்களுடன் இணைந்து அமைப்போம்

முள்ளிவாய்க்காலில் நடந்த தமிழினப் படுகொலையை நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்கால் மண்ணில் இனப்படுகொலை நினைவுத் தூபியொன்றை தமிழ்மக்களுடன் இணைந்து அமைப்போமெனத் தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உறுதியளித்துள்ளார்.
யாழ்.கொக்குவிலிலுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் புதன்கிழமை (27.05.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.