டெலிகிராம் நிறுவுனருக்கு சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பித்தது ரஷ்யா

டெலிகிராம் நிறுவுனர் பாவெல் துரோவை (Pavel Durov) கைது செய்வதற்கான சர்வதேச பிடியாணை உத்தரவினை ரஷ்யா பிறப்பித்துள்ளதாக அந்நாட்டு மத்திய பாதுகாப்பு சேவை அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

பாவெல் துரோவ் மீது ரஷ்ய குற்றச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணையில் உள்ள குற்ற வழக்கின் முக்கிய குற்றச்சாட்டாக, அவர், பயங்கரவாத செயல்களை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்டமை சுட்டிக்காட்டப்பட்டு, அவரை கைது செய்வதற்கான சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்டர்போல் முதலான பல வழிகளில் அவரை ரஷ்யாவுக்கு நாடு கடத்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை கைது செய்ய ரஷ்ய நீதிமன்றமும் பிடியாணை பிறப்பித்து, அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது,