நீதிமன்ற உத்தரவின்படி அண்மையில் இராகலை சென் லெனாட்ஸ் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட 6 குடும்பங்களை, மீண்டும் அதே பகுதியிலேயே மீளக் குடியேற்றுவது குறித்து காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
கொழும்பு ஜே.டி.ஏ. பெரேரா கேலரியில் வெள்ளிக்கிழமை (17) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் தீர்ப்புகள் மலையக மக்களுக்கு எதிராக இருக்கும் பட்சத்தில், ஒரு இணக்கப்பாட்டின் மூலம் அந்த மக்களை தற்காலிகமாகக்கூட அங்கிருந்து வெளியேற்றாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் தீவிர அவதானம் செலுத்தி வருகிறது என்றும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


