யாழ் பண்டத்தரிப்புக் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள பிரதேச சபையின் கொல்களம் அமைந்துள்ள காடாப்புலம் காணியில் 2012 ஆம் ஆண்டு தொடக்கம் இராணுவத்தினர் முகாம் அமைத்துத் தங்கியிருந்த நிலையில் தற்போது அந்தக் காணியை விட்டு இராணுவத்தினர் முழுமையாக வெளியேறியுள்ளனர்.
அங்கிருந்த இராணுவத்தினர் அராலி இராணுவ முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந் நிலையில் காணியானது புதன்கிழமை (28.01.2026) சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலாளரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.





