மலையகப் பாடசாலைகளுக்கு காணியைப் பெற்றுக்கொடுப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்க பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளன!

மலையகப் பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு காணிகளைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிப்பதற்காக அதனுடன் தொடர்புடைய அமைச்சுகளிடம் இருந்து பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளன.

அதற்கமைய கல்வி அமைச்சு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள், பொது சேவைகள் நிர்வாக அமைச்சு மற்றும் நிதி அமைச்சு ஆகியவற்றிடமிருந்து  பரிந்துரைகள் முன்வைக்கபட வேண்டுமென்று  கோரிக்கை விடுக்கப்பட்டது.

மலையகப் பெருந்தோட்டப் பாடசாலைகளின் அபிவிருத்தி குறித்து, பிரதமரும்  கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவுடன் இன்று  விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது.