யாழ்., மன்னார் விஜயம்: கல்வி, அபிவிருத்தி மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பு குறித்து அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் கலந்துரையாடல்!

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கையின் வடக்கு மாகாணத்துக்கிடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் மக்களுக்கிடையேயான தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மெத்யூ டக்வொர்த் (Matthew Duckworth) யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளுக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டார்.

இந்த விஜயத்தின் போது கல்வி, சுகாதாரம், சமூக அபிவிருத்தி, முதலீடு மற்றும் மக்களுக்கிடையிலான உறவுகளை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பாக பல்வேறு தரப்பினருடன் அவர் கலந்துரையாடியுள்ளார்.

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கையின் வடக்கு மாகாணத்துக்கிடையிலான உறவு, இரு நாடுகளின் மக்களால் உருவாக்கப்பட்ட வலுவான சமூகப் பிணைப்புகளின் அடிப்படையில் வளர்ந்துள்ளதாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. கல்வி, அபிவிருத்தி ஒத்துழைப்பு, முதலீடு, இலக்கியம் மற்றும் கலாசார பரிமாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த உறவுகள் தொடர்ந்து விரிவடைந்து வருகின்றன.

யாழ்ப்பாணம் மற்றும் மன்னாருக்கான விஜயத்தின் போது நூலகங்கள், பல்கலைக்கழகங்கள், வைத்தியசாலைகள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளை உயர்ஸ்தானிகர் சந்தித்து, எதிர்கால ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறித்தும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டார்.

இலங்கையின் வடக்கு மாகாணத்துடனான இந்த வலுவான உறவுகள், இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகால நட்புறவை மேலும் உறுதிப்படுத்துவதுடன், கல்வி, சமூக அபிவிருத்தி மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிலும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும், மக்கள்-மக்கள் உறவுகள், கல்வி மற்றும் அபிவிருத்தி கூட்டாண்மைகள் ஆகியவற்றின் ஊடாக இலங்கை–அவுஸ்திரேலியா உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு அவுஸ்திரேலியா தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்