லலித், குகன் வழக்கு: கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் சாட்சியமளிப்பதற்காக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்‌ஷவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 29ஆம் திகதி கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.