சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டம் : இனி வீட்டில் இருந்தபடியே ஸ்மார்ட்போன் மூலம் பதிவு!

புதிதாக விரிவாக்கப்பட்டுள்ள டிஜிட்டல் சேவைத் தளத்தின் கீழ் பொதுமக்கள் இனி வீட்டில் இருந்தவாறு ஸ்மார்ட் தொலைபேசி ஊடாக சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களில் பதிவு செய்துகொள்ள முடியும் என்று சமூகப் பாதுகாப்புச் சபை தெரிவித்துள்ளது.

www.socialsecurity.lk என்ற இணையத்தளத்தின்  ஊடாக சமூகப் பாதுகாப்பு சேவைகளை மிகவும் திறமையாகவும் வசதியாகவும் அணுகுவதற்கு வசதிகளை வழங்குவதே இந்த டிஜிட்டல் மயமாக்கலின் நோக்கமாகும் என்றும் சபை குறிப்பிட்டுள்ளது.