ஜே.வி.பி பங்கேற்காது

தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களை அறிவூட்டும்   சர்வகட்சி மாநாடு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜனாதிபதி செயலகத்தில் புதன்கிழமை (26) நடைபெறவுள்ளது.

இதற்காக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனினும், ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி  இந்த சர்வக்கட்ட மாநாட்டில் பங்கேற்காது என சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார்.