பரீட்சைகள் குறித்து வெளியான அறிவிப்பு

சாதாரணத் தர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் குறித்து விசேட அறிவிப்பு இன்று(07) வெளியாகியுள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றில் உரையாற்றுகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி, உயர்தரப் பரீட்சை இந்த வருட இறுதிக்குள் நடைபெறும் என அமைச்சர் கூறினார்.

எனினும், 2023 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் திட்டமிடப்பட்டுள்ள சாதாரண தரப் பரீட்சை 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நடைபெறும் என அவர் குறிப்பிட்டார்.