வென்னப்புவ பகுதியில் ‘ஹைடொப் துஷார’வின் பிரதான உதவியாளர் கைது!

வென்னப்புவ, தும்மலதெனிய பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாலான மத்திய ஊழல் ஒழிப்புப் படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது அவரிடமிருந்து சுமார் 75 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருள் தொகுதி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், துபாயில் தலைமறைவாகியிருந்து போதைப்பொருள் கடத்தலை வழிநடத்தி வரும் ‘ஹைடொப் துஷார’  என்பவரின் பிரதான உதவியாளர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவரைத் தடுப்புக் காவலில் வைத்து மேலதிக விசாரணைகளில் ஈடுபட பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.