வியட்நாமில் படகு விபத்து! உயிரிழந்தவர்களுக்கு வைகோ அஞ்சலி

வியட்நாமின் தென் பகுதியில் உள்ள பூகுவாத் தீவு அருகில் நடுக் கடலில், சுற்றுலா படகு கவிழ்ந்து 15 இந்தியர்கள் உள்ளிட்ட 36 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

இந்தத் துயரச் செய்தி அறிந்தவுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்கள், சேலம் சரக டி.ஐ.ஜி சந்தோஷ் ஹடிபி மானி அவர்களை சிறப்பு அலுவலராக வியட்நாமின் ஹோசிமின் நகருக்கு அனுப்பி வைத்து உரிய மீட்பு நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்.

உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதலை தெரிவிப்பதுடன், ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் விரைந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.