கடல்சார் பணியாளர்களின் பாதுகாப்பு முக்கியம்: ட்ரம்ப்பிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்

இந்​தி​யக் கடல்​சார் பணி​யாளர்​களின் பாது​காப்பு தொடர்​பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்​பிடம் பிரதமர் நரேந்​திர மோடி வலி​யுறுத்​தி​னார்.

ஜி7 அமைப்​பில் அமெரிக்​கா, பிரிட்​டன், பிரான்​ஸ், ஜெர்​மனி, இத்தாலி, கனடா, ஜப்​பான் ஆகிய நாடு​கள் உறுப்​பினர்​களாக உள்ளன. இந்த ஆண்​டுக்​கான ஜி7 உச்சி மாநாடு பிரான்​ஸின் ஏவியான் நகரில் கடந்த 15-ம் தேதி தொடங்​கியது.

இதில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பிரிட்​டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்​மர், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்​ரான், ஜெர்மனி பிரதமர் பிரெட்​ரிக் மெர்​ஸ், இத்​தாலி பிரதமர் ஜார்​ஜியா மெலோனி, கனடா பிரதமர் மார்க் கார்​னி, ஜப்​பான் பிரதமர் சனேடகைச்​சி, ஐரோப்​பிய ஆணை​யத்​தின் தலை​வர் உர்​சுலா வொன் டெர் லியன், ஐரோப்​பியக் கவுன்​சில் தலை​வர் அந்தோணியோ கோஸ்டா உள்​ளிட்​டோர் பங்​கேற்​றுள்​ளனர்.

இதனிடையே, பிரதமர் மோடி கடந்த 13-ம் தேதி டெல்​லி​யில் இருந்து பிரான்ஸ் சென்​றநிலை​யில் அங்​கிருந்து ஸ்லோவேக்கியாவுக்கு பயணம் மேற்​கொண்​டார். அந்​நாட்​டுத் தலை​வர்​களைச் சந்​தித்​துப் பேச்​சு​வார்த்தை நடத்​திய பின்​னர் அவர் ஜி7 மாநாட்​டில் பங்​கேற்​ப​தற்​காக பிரதமர் மோடி நேற்று முன்​தினம் மீண்​டும் பிரான்​ஸுக்கு திரும்​பி​னார்.

பிரான்​ஸின் ஏவி​யான் நகரில் நேற்று முன்​தினம் மாலை நடை​பெற்ற ஜி7 அமர்​வு​களில் பிரதமர் மோடி சிறப்பு விருந்​தின​ராகப் பங்​கேற்​றார். ஜி7 மாநாட்​டின் போது அமெரிக்க அதிபர் ட்ரம்​பை, பிரதமர் மோடி நேற்று சந்​தித்​துப் பேசி​னார். இரு தலை​வர்​களும் கைகுலுக்கி கொண்​டனர். இரு​வரும் அரு​கருகே அமர்ந்து 5 நிமிடங்​கள் பேசினர். கடந்த 2025-ம் ஆண்டு பிப்​ர​வரி​யில் அமெரிக்கா​வுக்கு சென்ற மோடி, அதிபர் ட்ரம்பை சந்​தித்​துப் பேசினார்.

அதன் பிறகு அமெரிக்க அரசின் கூடு​தல் வரி விதிப்​பால் இரு நாடுகள் இடையி​லான உறவில் லேசான விரிசல் ஏற்​பட்​டது. இந்தச் சூழலில் சுமார் 16 மாதங்​களுக்​குப் பிறகு அதிபர் ட்ரம்பை அவர் நேற்​று​முன்​தினம் மீண்​டும் சந்​தித்​துப் பேசி​யது முக்கியத்துவம் பெற்​றது.

மாநாடு இறுதி நாள்

இந்​நிலை​யில் மாநாட்​டின் இறுதி நாளான நேற்​று, பிரிட்​டிஷ், கனடா, இத்​தாலி பிரதமர்​கள், ஐக்​கிய அரபு அமீரக அதிபர் முகமது பின் ஜயாத் அல் நயான் உள்​ளிட்​டோரை பிரதமர் மோடி தனித்​தனி​யாகச் சந்​தித்​துப் பேசி​னார்.

இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்​புட​னும் பிரதமர் மோடி தனி​யாகப் பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். காலை​யில் தொடங்​கிய மாநாட்டு நிகழ்ச்​சிகளில் பங்​கேற்ற பின்​னர் மதிய உணவு இடைவேளை​யின்​போது அதிபர் ட்ரம்ப்பை பிரதமர் மோடி சந்​தித்​தார்.