கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டின் கீழ் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று வியாழக்கிழமை (18) உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
“அரசியல் வேண்டாம், பக்கச்சார்பு வேண்டாம்” என்பதை வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.









