குண்டசாலை பிரதேசத்தில் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.இதனால் பொது மக்கள் அவதிப்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.
குண்டசாலை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்படும் குழாய் நீர் விநியோகமானது ,சீரற்றுக் காணப்படுகிறது. தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் வினியோகம் தடைப்பட்டு வருகிறது.
சில பிரதேசங்களுக்கு முற்றாக முடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. . இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு மத்தியில் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
புதுவருட காலத்தில் பாரிய சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
குண்டசாலை தொகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கும் பலகொல்ல பகுதியில் உள்ள மகாவலி ஆற்றின் நீர்மட்டம் கணிசமாகக் குறைந்துள்ளது இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
வரி செலுத்தும் மக்களாகிய தங்களுக்கு இந்த நீர் பிரச்சினைக்கு தீர்வு காண குண்டசாலை பிரதேச சபை உடனடியாக தலையிட வேண்டும் எனவும், அவர்கள் வேண்டுகின்றனர்.
பவுசர்கள் மூலடதவது தமக்கு குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




