சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆன்மீக உரை

சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப்  பேரவையின் ஏற்பாட்டில் வாராந்த நிகழ்வாக ஆன்மீக உரையும், உதவிகள் வழங்கலும் இன்று வெள்ளிக்கிழமை (10.07.2026) முற்பகல் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் பொது நீக்கிதனை நினைய வல்லார்க்குப் பெருந்துணையே எனும் தலைப்பில் கலாநிதி.இளையதம்பி  ஜெயந்திரன் ஆன்மீக உரை ஆற்றினார்.