டெங்கு தடுப்பு: மாணவர்கள் முழுக் கை, முழுக் கால் ஆடைகள் அணிய கல்வி அமைச்சு அனுமதி

பாடசாலை மாணவர்கள் டெங்கு நுளம்புக் கடியிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, பாடசாலைகளில் தங்களது சீருடைக்கு மேலதிகமாக கைகள் மற்றும் கால்களை முழுமையாக மூடக்கூடிய பொருத்தமான ஆடைகளை அணிவதற்கு மாணவர்களுக்கு அனுமதி வழங்குமாறு அறிவுறுத்தல்கள் சகல அதிபர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

முறையான தரத்தைக் கொண்ட கொசு விரட்டிகளைப் பயன்படுத்துமாறு மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டுமாறும் அறிவுறுத்தப்படுகிறது.