பிள்ளையான் தொடர்ந்து விளக்கமறியலில்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ. தர்ஷினி முன்னிலையில் இன்று (04) செவ்வாய்க்கிழமை இந்த வழக்கு விசாரணை நடைபெற்றதுடன், இதன்போது அவர் காணொளி ஊடாக ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2008 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற 5 கொலைச் சம்பவங்கள் தொடர்பில் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் ஏனைய சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வழக்குத் தாக்கல் செய்திருந்தது.

அங்கு அவர் வழக்கின் மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளதுடன், கல்லடி பகுதியில் இடம்பெற்ற ஐந்து கொலைகள் மற்றும் காணி பிணக்கு தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளனமை குறிப்பிடத்தக்கது.