பேருவளை கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது திமிங்கிலம்!

பேருவளை, மருதானை பகுதியில் இறந்த திமிங்கிலம் ஒன்றின் உடல் பகுதி கரை ஒதுங்கியுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கரை ஒதுங்கிய உடற்பகுதி முழுமையாக அழுகிய நிலையில் காணப்பட்டதாகவும், அதிலிருந்து வீசிய கடும் துர்நாற்றம் காரணமாக ஹிக்கடுவை தேசிய பூங்காவின் வனஜீவராசிகள் அதிகாரிகள் அதனை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான அறிக்கையை சனிக்கிழமை  (27) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வனஜீவராசிகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.