ராணிக்காடு பகுதியிலிருந்து பொகவந்தலாவாவில் உள்ள பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
குறித்த விபத்தானது இன்று (28.04.2026) காலை 7:30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டு்ள்ளது.
விபத்தில் குறைந்தது 34 மாணவர்கள் காயமடைந்து பொகவந்தலா பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கைகளின்படி, அந்தத் தனியார் பேருந்து இயங்கிக் கொண்டிருந்தபோது அதன் பிரேக்கிங் அமைப்பில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
வாகனத்தை நிறுத்தும் முயற்சியில், சாரதி பேருந்தை பிரதான வீதியோரம் இருந்த ஒரு கரையின் மீது திருப்பியுள்ளார்.
மேலதிக சிகிச்சைக்காக நான்கு மாணவர்கள் டிக்கோயாவில் உள்ள மாவட்ட ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மாவட்ட மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
பொலிஸார் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



