யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாக ஊடகவியலாளர்கள் போராட்டம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (31) ஊடகவியலாளர்களால் போராட்டம் நடத்தப்பட்டது.

யாழ்ப்பாணத்துக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.

முன்னதாக யாழ். மாவட்ட செயலகத்தில் ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கில் கலந்துகொள்ளவிருந்த நிலையிலேயே இப்போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனக் கோரி, ஊடக பிரதி அமைச்சரின் நிகழ்வினை யாழ். ஊடக அமையத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள் புறக்கணித்தனர்.