இலங்கைக்கான அமெரிக்க உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அரசியல் அதிகாரி ரேச்சல் ஹக்கின்ஸ் அவர்களுக்கும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோருக்கும் இடையில் இன்று (28) சந்திப்பொன்று இடம்பெற்றது.
அந்த வகையில் முல்லைத்தீவு – கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் சமகால விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.





