பாஜக பெண் தலைவர் முனைவர் உதிதா தியாகி, கட்சியின் மகளிர் பிரிவிலும் ‘மகா காளி வாஹினி’யின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.
இந்நிலையில், துறவிகள் அமைப்பான ‘ஜுனா அஹாரா’ இவரை மகா மண்டலேஸ்வராக நியமித்துள்ளது. மேலும், ‘யாதி மா பிரத்யங்கிரா கிரி’ என்ற புதிய பெயரையும் உதிதாவுக்கு சூட்டியுள்ளது. ஹரித்வாரின் கன்காலில் உள்ள ஹரிஹர் ஆசிரமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜுனா அஹாராவின் மூத்த துறவி ஆச்சார்ய மகா மண்டலேஸ்வர் சுவாமி அவ்தேஷானந்த் கிரி, உதிதாவுக்கு முறைப்படி பொறுப்பை வழங்கினார்.
அத்துடன் முராத் நகரில் உள்ள ‘ ஸ்ரீமகா காளி பீடம் அனுமன் தாம்’ அமைப்பின் பீடாதிபதியாகவும் உதிதா அறிவிக்கப்பட்டார். ஆச்சார்ய மகா மண்டலேஸ்வர் சுவாமி அவதேஷானந்த் கிரி மகாராஜ் அவருக்கு முறைப்படி தீட்சை வழங்கி கவுரவித்துள்ளார்.
இதுபோல் பெண் துறவிகளுக்கு முக்கிய பதவிகள் வழங்குவது அரிதானது. முனைவர் உதிதா தியாகி பல ஆண்டுகளாகச் சமூக மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவர் பாஜக மகிளா மோர்ச்சாவில் மண்டல அளவில் முக்கிய பொறுப்பு வகிக்கிறார்.
‘மகா காளி வாஹினி’யின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். சிறந்த கல்வியாளராக திகழும் உதிதா 2 பாடப் பிரிவுகளில் முனைவர் பட்டம் பெற்றவர். மாணவர் பருவத்தில் உ.பி. ரோஹில்கண்ட் பல்கலைக்கழகத்தில் முதலிடம் பிடித்தவர். அழகிப் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளார்.
இதுகுறித்து உதிதா தியாகி சமூக ஊடகங்களில் தெரிவிக்கையில், “பூஜ்ய தாதா குரு ஹரிகிரி மகாராஜ், யதி நரசிம்ஹானந்த் கிரி மகாராஜ் மற்றும் ஆச்சார்ய மகா மண்டலேஷ்வர் சுவாமி அவ்தேஷானந்த் கிரி மகாராஜ் ஆகியோரின் ஆசியுடன் இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளேன். இது எனக்குக் கிடைத்த கவுரவம் மற்றும் மிகப்பெரிய பொறுப்பு. சனாதன தர்மத்துக்குச் சேவை செய்வதில் நான் அர்ப்பணிப்புடன் இருப்பேன்” என்றார்.
இதுபோல் பெண் துறவிகளுக்கு முக்கிய பதவிகள் வழங்குவது அரிதானது. முனைவர் உதிதா தியாகி பல ஆண்டுகளாகச் சமூக மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவர் பாஜக மகிளா மோர்ச்சாவில் மண்டல அளவில் முக்கிய பொறுப்பு வகிக்கிறார்.
‘மகா காளி வாஹினி’யின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். சிறந்த கல்வியாளராக திகழும் உதிதா 2 பாடப் பிரிவுகளில் முனைவர் பட்டம் பெற்றவர். மாணவர் பருவத்தில் உ.பி. ரோஹில்கண்ட் பல்கலைக்கழகத்தில் முதலிடம் பிடித்தவர். அழகிப் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளார்.
இதுகுறித்து உதிதா தியாகி சமூக ஊடகங்களில் தெரிவிக்கையில், “பூஜ்ய தாதா குரு ஹரிகிரி மகாராஜ், யதி நரசிம்ஹானந்த் கிரி மகாராஜ் மற்றும் ஆச்சார்ய மகா மண்டலேஷ்வர் சுவாமி அவ்தேஷானந்த் கிரி மகாராஜ் ஆகியோரின் ஆசியுடன் இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளேன். இது எனக்குக் கிடைத்த கவுரவம் மற்றும் மிகப்பெரிய பொறுப்பு. சனாதன தர்மத்துக்குச் சேவை செய்வதில் நான் அர்ப்பணிப்புடன் இருப்பேன்” என்றார்.





