‘திரைக்கதை மன்னன்’ என இந்திய அளவில் கொண்டாடப்பட்ட கே.பாக்யராஜ் காலமானார்

பிரபல இயக்​குநரும் நடிகரு​மான கே.​பாக்​ய​ராஜ், மாரடைப்​பால் சென்​னை​யில் நேற்று கால​மா​னார். அவருக்கு வயது 73. அவரது உடலுக்கு முதல்​வர் விஜய், திமுக தலை​வர் ஸ்​டா​லின் உள்​ளிட்ட தலை​வர்​கள், ரஜினி​காந்த், கமல்​ஹாசன் உள்​ளிட்ட திரை​யுல​கினர் அஞ்​சலி செலுத்​தினர். அரசு மரியாதையுடன் இறு​திச் சடங்​கு​கள் இன்று நடை​பெறுகின்​றன.

இயக்​குநர் கே.​பாக்​ய​ராஜ் 2 நாட்​களுக்கு முன்பு கோவா​வில் நடந்த நடிகை குஷ்பு மகள் திரு​மணத்​தில் கலந்​து​கொண்​டார். பின்​னர் சென்னை திரும்​பிய அவர் நேற்று காலை நடைபயிற்சி மேற்​கொண்ட பிறகு வீட்​டுக்கு வந்​தார். அப்​போது அவருக்கு திடீரென நெஞ்​சுவலி ஏற்​பட்​டுள்​ளது. உடனடி​யாக சென்னை கிரீம்ஸ் சாலை​யில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்​தும் பலனின்​றி, அவர் உயி​ரிழந்​தார்.

இதையடுத்​து, பாக்​யராஜ் உடல் மருத்​து​வ​மனை​யில் இருந்து நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள அவரது வீட்​டுக்கு கொண்டு வரப்​பட்​டது. அங்கு அவரது உடலுக்கு முதல்​வர் விஜய், மாலை அணி​வித்து அஞ்​சலி செலுத்​தி​னார். பின்​னர் பாக்​ய​ராஜின் மனைவி பூர்​ணி​மா, மகன் சாந்​தனு, மகள் சரண்யா வுக்கு ஆறு​தல் கூறி​னார்.

திமுக தலை​வர் ஸ்​டா​லின், எம்​.பி.க்​கள் டி.ஆர்.​பாலு, ஆ.ராசா ஆகியோ​ரும் பாக்​ய​ராஜ் உடலுக்கு அஞ்​சலி செலுத்தி, குடும்​பத்​தினருக்கு ஆறு​தல் தெரிவித்தனர்.

அமைச்​சர்​கள் ராஜ்மோகன், வன்​னியரசு, விசிக தலை​வர் திரு​மாவளவன், புதிய நீதிக்​கட்சி தலை​வர் ஏ.சி.சண்​முகம், காங்​கிரஸ் முன்னாள் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, முன்​னாள் அமைச்​சர் ஜெயக்​கு​மார், மநீம தலை​வர் கமல்​ஹாசன், நடிகர் ரஜினி​காந்த், பிரபு, விக்​ரம்​பிரபு, ஜெய​ராம், சார்​லி, ராதிகா, சினேகா, நயன்தாரா, சுஹாசினி,இயக்​குநர்​கள் மணிரத்​னம், பார்த்​திபன், ஆர்.சுந்​தர்​ராஜன், பி.​வாசு, பாண்​டிய​ராஜன், சமுத்​திரக்​கனி, ஹெச்​.​வினோத், லோகேஷ் கனக​ராஜ், சுசீந்​திரன். சந்​தான​பார​தி, இசை அமைப்​பாளர் தேவா உள்​ளிட்​டோர் பாக்​ய​ராஜ் உடலுக்கு அஞ்​சலி செலுத்​தினர்.

பெண்​கள் உட்பட ஏராள​மான பொது​மக்​கள், ரசிகர்​கள் நீண்ட வரிசை​யில் வந்து அஞ்​சலி செலுத்தி வரு​கின்​றனர். பாக்​ய​ராஜின் திரைப்​படக் காட்​சிகள், பிரபல வசனங்​களை பலரும் சமூக வலை​தளங்​களில் பகிர்ந்​து, அவரது நினை​வு​களை சோகத்​துடன் பகிர்ந்து வரு​கின்​றனர். பாக்​ய​ராஜ் மறைவையொட்டி முதல்​வர் விஜய் வெளி​யிட்​டுள்ள இரங்​கல் செய்​தி​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழ்த் திரை​யுல​கின் தலைசிறந்த இயக்​குநர், நடிகர், திரைக்​கதை ஆசிரியர், வசனகர்த்​தா, இசை அமைப்​பாளர் என பன்​முகத் திறமை​யால் முத்​திரை பதித்த கே.​பாக்​ய​ராஜ் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்​சி​யும், ஆழ்ந்த வேதனை​யும் அடைந்​தேன்.

தனித்​து​வ​மான கதை​யாக்​கம், நகைச்​சுவை கலந்த நடிப்பு, கிராமிய வாழ்​வியல் மற்​றும் குடும்ப உறவு​களின் ஆழமான உணர்​வு​களைப் பிர​திபலிக்​கும் திரைப்​படங்​கள் மூலம் தமிழ் மக்​களின் மனதில் நீங்கா இடம்​பிடித்த கே.​பாக்​ய​ராஜின் பங்​களிப்பு தமிழ்த் திரைப்பட உலகுக்கு அளப்​பரிய​தாகும். அவரது ஒவ்​வொரு படைப்​பும் பொழுது​போக்​கோடு, மனித நேயம் மற்​றும் சமூக விழு​மி​யங்​களைப் பேசும்; காலத்​தால் அழி​யாத நினை​வு​களாக என்​றும் நிலைத்​திருக்​கும். அவரது மறைவு தமிழ்த் திரை​உல​குக்கு ஈடு​செய்ய முடி​யாத பேரிழப்​பாகும். அவரை இழந்து வாடும் குடும்​பத்​தினர், உறவினர்​கள், நண்​பர்​கள், திரைத்​துறை​யினர், ரசிகர்​களுக்கு எனது ஆழ்ந்த இரங்​கலை​யும், அனு​தாபங்​களை​யும் தெரி​வித்​துக் கொள்​கிறேன். அவரது ஆன்மா இறைவன் திரு​வடி​யில் இளைப்​பாறப் பிரார்த்​திக்​கிறேன்.