எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று (27) திங்கட்கிழமை மாலை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
South Asians & Diaspora
இச்சந்திப்பின் போது, மலையக பெருந்தோட்ட மக்கள் எதிர்நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகள், சவால்கள் மற்றும் அவர்களின் நலன்கள் தொடர்பிலும், நாட்டின் சமகால அரசியல், பொருளாதார, சமூக விவகாரங்கள் தொடர்பிலும் இங்கு இரு தரப்பினரும் பரஸ்பரம் சிநேகபூர்வமாக கலந்துரையாடியுள்ளனர்.






