மாவீரர் நினைவு சுமந்த போட்டிகள் – 2025 ஆரம்பமாகின!

தமிழர் ஒருங்கிணைப் புக்குழு பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை நாடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த போட்டிகள் 2025 இன்று (05.01.2025) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான திறான்சி நகரத்தின் மாநகரசபை மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

சதுரங்கப்போட்டிகளுடன் இன்றைய போட்டிகள் ஆரம்பித்தன. இப்போட்டியில் 9 விளையாட்டுக்கழகங்கள், சிறுவர், பெரியவர்கள் என 135 போட்டியாளர்கள் பங்குகொண்டு சிறப்பித்துள்ளனர்.