கண்டி – புசல்லாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நயாப்பன மேல் பிரிவு தோட்டத்தில் உள்ள தேயிலை மலையில் சிறுத்தையின் சடலம் ஒன்று இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
சிறுத்தையின் சடலத்தை இனங்கண்ட அப் பிரதேச மக்கள் புசல்லாவை பொலிஸாருக்கு தகவலை வழங்கியுள்ளனர்.
இதனை தொடர்ந்து கம்பளை வனஜீவராசி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கொண்டு சென்றுள்ளனர்.
உயிரிழந்த சிறுத்தை தொடர்பில் மேலதிக விசாரணைகளை கம்பளை வனஜிவராசி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.