இந்தியாவின் தமிழக மீனவர்களின் தொடர்ச்சியான அத்துமீறலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அத்துமீறலைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரியும்
ஞாயிற்றுக்கிழமை (19.07.2026) யாழ்.புங்குடுதீவி ல் மீனவர்களால் ஆர்ப்பாட்டப் பேரணி நடாத்தப்பட்டுள்ளது.
புங்குடுதீவு சென்.சேவியர் கடற்தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் புங்குடுதீவு ஆலடிச் சந்தியில் முற்பகல்-11 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகி பின்னர் பேரணியாக புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவிலுக்கு அருகில் மணற்காடு கடற்கரையை அடைந்து அங்கு கடலில் இறங்கியும் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.




