ஊடகவியலாளர் ஆறுமுகராசா சபேஸ்வரன் (சபேசன்) அவர்கள் இன்று Toronto வில் காலமானார் நீண்ட நாட்களாக சுகவீனமுற்றிருந்த நிலையில், சிகிச்சைகள் பயனளிக்காத நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்தது.
சபேசன் , யாழ். ஊடக அமையத்தின் முன்னாள் தலைவரும், யாழ். தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், கனடாவைத் தளமாகக்கொண்ட CMR 101.3 FM பண்பலை வானொலி மற்றும் TVI தொலைகாட்சி ஆகியவற்றின் முன்னாள் தமிழகச் செய்தியாளரும் (உருத்திரன்) என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் போர் உச்சம்பெற்றிருந்த காலத்தில், எமது அரசியல் மற்றும் மக்களின் அறப்போராட்டங்கள் பற்றிய நேரடித்தகவல்களை ‘உருத்திரன்’ என்ற பெயரில் அன்றாடம் செய்திகளாக Toronto மக்களுக்கு அறியத்தந்த சபேசனின் ஊடகப்பணி அளப்பரியது.



