அநுராதபுரம் – நொச்சியாகம பகுதியில் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை (04) கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
முழங்கால் வரை எரிந்துள்ள சடலம், ஒரு பெண்ணுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
நீதிவான் விசாரணைகளுக்காக சடலம் சம்பவ இடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், நொச்சியாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.





