பிள்ளையானின் அடிப்படை உரிமை மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் தீர்மானம்!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து தடுத்து வைத்திருப்பதை சவாலுக்குட்படுத்தி, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான்  தாக்கல் செய்துள்ள அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைவாக, குறித்த மனுவை 2027 ஜனவரி மாதம் 19 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.