சிலரின் சுயநலத்​தால் சுயத்தை தொலைக்கும் அதிமுக

ஒட்​டுமொத்த கட்​சி​யின் நலனை​விட ஒரு சிலரின் சுயநலனே பிர​தான​மாக பார்க்​கப்​ பட்​ட​தால், பொன்​விழா கண்ட அதி​முக மீண்​டும் ஒரு அக்​னிப் பரீட்​சைக்கு ஆளாகி இருக்கிறது.

அதி​முக என்ற கட்​சியை தொடங்க வேண்​டும் என்று முதலில் எம்​ஜிஆர் நினைக்​க​வில்​லை. அவரது ரசிகர்​கள் தான் திமுக-​வில் அவருக்கு தரப்​பட்ட நெருக்​கடிகளை சகித்​துக் கொள்​ள​முடி​யாமல் மதுரை​யில் தாமரைக் கொடியை ஏற்றி அதி​முக-வுக்கு அடித்​தளம் போட்​டார்​கள். ரசிகர்​களின் வேண்​டு​கோளை ஏற்று 1972-ம் ஆண்டு அக்​டோபரில் அதி​முக என்ற கட்​சியை எம்​ஜிஆர் தொடங்​கி​னார். இன்​றைக்கு விஜய் ரசிகர்​கள் மீது எப்​படி ‘தற்​குறிகள்’ முத்​திரை குத்​துகிறார்​களோ அதே​போல் அன்​றைக்கு எம்​ஜிஆர் ரசிகர்​களை, ‘விசிலடிச்​சான் குஞ்​சுகள்’ என விமர்​சித்​தது திமுக.

எம்​ஜிஆர் ரசிகர் மன்​றங்​கள் திமுக-வுக்​குள்​ளேயே உட் கிளை​களாக இருந்​த​தால் அப்​போது திமுக மேடைகளுக்கு பதில் மேடை போட்டு உடனுக்​குடன் பதிலடி கொடுத்​தார்​கள். “ரத்​தத்​தின் ரத்​தமே” என்று எம்​ஜிஆர் சொன்​ன​போதெல்​லாம், ஏதோ… தாங்​களே கட்​சிக்கு ரத்​தம் கொடுத்​ததைப் போன்று உணர்ந்​தார்​கள். இதனால் ஏகப்​பட்ட நெருக்​கடிகளை​யும் எதிர்​கொண்​டார்​கள் எம்​ஜிஆர் ரசிகர்​கள்.

மிக​வும் தீவிர​மாக இருந்த அவர்​களில் சிலரை ஜெயி​லில் இருந்த ரவுடிகளை பரோலில் எடுத்து பழிதீர்த்த சம்​பவங்​களும் நடந்​தன. இதனால், திமுக-​வும் அதி​முக-​வும் என்​றைக்​குமே சந்​திக்க முடி​யாத எதிரெ​திர் துரு​வங்​களாக மாறிப் போயின. அதி​முக-​வினரும் திமுக-​வினரும் பொது இடங்​களில் கைகுலுக்​கக் கூட தயங்​கி​னார்​கள்.

இத்​தகையை நிலைப்​பாடு தான் அதி​முக-வை முதல் தேர்​தலிலேயே ஆட்​சிக் கட்​டிலிலும் அமர​வைத்​தது. அதி​முக-வுக்கு ஜெயலலிதா தலை​மையேற்ற பிறகு இந்​தப் போக்கு இன்​னும் தீவிர​மானது. ‘தீய சக்​தி’ என்ற வார்த்தை பிரயோகத்தை ஜெயலலிதா சர்வ சாதா​ரண​மாய் உபயோகித்​தார்.

திமுக-​வினருடன் அதி​முக-​வினர் யாராவது தொடர்​பில் இருப்​ப​தாக தெரிய​வந்​தாலே அவர்​களை கட்​சி​யை​விட்டு கட்​டம் கட்​டி​னார். மதுரை​யில் ஒரு திரு​மணத்​தில் மு.க.அழகிரி​யும் செல்​லூர் ராஜு​வும் ஒன்​றாக கலந்து கொண்​ட​தாக வெளி​யான ஒரு போட்​டோவை ஆதா​ர​மாக வைத்தே ராஜுவை அமைச்​சர் பதவியி​லிருந்தே தூக்​கிய​வர் ஜெயலலி​தா.

திமுக-வுக்​கும் அதி​முக-வுக்​கு​மான ‘உறவு’ இப்​படி இருக்​கை​யில், இந்​தத் தேர்​தலில் அதி​முக-வை ஜெயிக்க வைக்க முடி​யாத பழனி​சாமி, திமுக தயவில் அரியணை ஏற ஆசைப்​பட்​ட​தாகச் சொல்லி இன்​னொரு பிளவுக்கு பிள்​ளை​யார் சுழி போட்​டிருக்​கிறார்​கள் சி.​வி.சண்​முகம் எஸ்​.பி.வேலுமணி தலை​மையி​லான அதி​முக முன்​னாள் அமைச்​சர்​கள்.

கட்​சி​யை​விட்டு பிரிந்து போனவர்​களை எல்​லாம் ஒன்று சேர்த்து அதி​முக-வை பலப்​படுத்த வேண்​டும் என்று இவர்​கள் வலி​யுறுத்தி வந்​ததை உதாசீனப்​படுத்​தி​னார் பழனி​சாமி. தேர்​தல் முடிவு​கள் எதிர்​மறை​யாக வந்​தால் இவை அனைத்​தும் அவருக்கு எதி​ரான ஆயுதங்​களாக திரும்​பும், அதி​முக இன்​னொரு பிளவைச் சந்​திக்​கும் என்று அப்​போதே பேச்​சுகள் எழுந்​தன. அது​தான் இப்​போது நடந்​திருக்​கிறது.

அதேசம​யம், 2021 தேர்​தலில் தோற்​றாலும் அதி​முக-வை வலு​வான எதிர்க்​கட்சி நிலைக்கு கொண்டு வந்த பழனி​சாமி, கடந்த 5 ஆண்​டு​களில் கட்​சியை கட்​டுக்​கோப்​பாகவே வழிநடத்​தி​னார். உள்​ளடி வேலை பார்த்து கட்​சியை பாஜக உடைத்​து​விடக் கூடாது என்​ப​தற்​காகவே டெல்லி இழுத்த இழு​வைக்​கெல்​லாம் சென்​றவர், பலமான கூட்​ட​ணி​யைக் கட்​டமைத்​ததுடன் தனி ஆளாக தமிழகம் முழு​மைக்​கும் பிரச்​சா​ரம் செய்​தார். அதனால் தான் விஜய் அலை​யிலும் அதி​முக-வுக்கு கவுர​மான தோல்வி கிடைத்​திருக்​கிறது. அதனால் தான் கட்​சி​யும் இந்த நிமிடம் வரை அவர் சொல்​லுக்கு கட்​டுப்​பட்டு நிற்​கிறது.

ஆனால், இந்​தத் தோல்​வியி​லிருந்து தன்னை தலைநிமிர்த்​திக் கொள்​வதற்​காக திமுக-வுட​னும் கைகோக்க துணிந்த பழனி​சாமி, அதற்​குப் பிறகு அதி​முக என்ற கட்சி என்​னாகும் என்று சிறிதும் சிந்​திக்​க​வில்​லை. ஆட்​சிக்கு வந்​து​விட்​டால் அனைத்​தை​யும் சமாளித்​து​விடலாம் என வழக்​கம் போல் அவர் கணக்​குப் போட்​டார். முதலில் இதற்கு மூச்​சு​வி​டா​மல் இருந்த முன்​னாள் அமைச்​சர்​கள், பழனி​சாமி​யின் முயற்சி பலனளிக்​காது என்று தெரிந்து போனதும், தவெக ஆதரவு நிலைப்​பாட்​டுக்கு மாறி​னார்​கள்.

பழனி​சாமி திமுக-வுடன் கைகோக்க நினைக்​கும் போது நாம் தவெக-வுக்கு ஆதர​வளித்து அதி​காரத்​தில் பங்​கெடுப்​ப​தில் என்ன தவறு என்று சி.​வி.சண்​முகம், எஸ்​.பி.வேலுமணி போன்​றவர்​களும் சுயநல​மாகவே யோசித்​தார்​கள். அதை வெளிப்​படை​யாகச் சொல்​லாமல், “அம்​மா​வால் தீய சக்தி என்று சொல்​லப்​பட்ட திமுக-வுடன் கைகோக்க பழனி​சாமி திட்​ட​மிட்​டார். அதை ஏற்​க​முடி​யாமல் நாங்​கள் இந்த முடிவை எடுத்​தோம்” என்​கிறார்​கள். நான்கு நாட்​கள் பழனி​சாமி ஏற்​பாட்​டில் புதுச்​சேரி​யில் தங்கி ‘சிந்​தித்த’ பிறகு தான் இவர்​களுக்கு இந்​தத் ‘தெளிவு’ பிறந்​திருக்​கும் போலிருக்​கிறது.

தொடர் தோல்வி​களால் அதி​முக தொண்​டர்​கள் துவண்​டு​போய்க் கிடக்​கிறார்​கள். அவர்​களுக்கு ஆறு​தல் சொல்​லக்​கூட யாருக்​கும் நேரமில்​லை. ஆளாளுக்கு சுயநல​மாக சிந்​தித்து கட்​சியை ரெண்​டு​படுத்​தி​விட்​டு, “அதி​முக-வை உடைக்க வேண்​டும் என்​பது எங்​களது எண்​ணமில்​லை” என்​பவர்​கள், “பொதுக்​குழுவை கூட்​டு” என்று போர்க்​குரல் எழுப்​பு​கிறார்​கள். பதி​லுக்​கு, “கட்சி மாறி வாக்​களித்​தவர்​கள் மீது நடவடிக்கை எடுங்​கள்” என சபா​நாயகரிடம் மனு கொடுத்​திருக்​கிறது எதிர்​தரப்​பு. மொத்​தத்​தில், மீண்​டும் நீதி​மன்ற படி ஏறி நீதி​கேட்​கும் நெருக்​கடிக்கு ஆளாகி இருக்​கிறது அதிமுக.