வங்காள விரிகுடாவில் வெள்ளிக்கிழமை (24.10.2025) அந்தமான் தீவுகளுக்கு அருகாக மீண்டுமொரு தாழமுக்கம் உருவாகும் வாய்ப்புள்ளது. இந்த தாழமுக்கமும் வடக்கு, வடமேற்குத் திசை நோக்கி நகர்ந்து இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள மசிலிப்பட்டினம் அருகே கரையைக் கடக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், எதிர்வரும்-25 ஆம் திகதி முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல்துறையின் தலைவர் பேராசிரியர்.நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இன்று வியாழக்கிழமை (23.10.2025) அவர் வெளியிட்டுள்ள ஊடகச் செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் எதிர்வரும்- 25 ஆம் திகதி முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்ப்பது சிறந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





