யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கான “ஓவியம் யாரும் வரையலாம்” எனும் தலைப்பில் ஓவியம் வரைதல் பயிற்சி நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (26.04.2026) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது.
அமெரிக்காவிலிருந்து வருகை தந்திருந்த சன் சுந்தரம் நிகழ்வில் வளவாளராகப் பங்கேற்று ஓவியப் பயிற்சியும், வழிகாட்டுதலும் வழங்கினார். மேற்படி ஓவியப் பயிற்சி நிகழ்வில் நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.






