மே 17 இயக்கத்தின் திருமுருகன்காந்தி மற்றும் உறுப்பினர்களுடன் தமிழ் தேசிய பேரவையினர் சந்திப்பு

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவை பிரதிநிதிகள், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் அந்த இயக்கத்தின் உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினர்.

குறித்த சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை (5) இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்தச் சந்திப்பு, தமிழர் அரசியல் மற்றும் சமூக விடயங்களில் தொடர்ச்சியான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இடம்பெற்ற முக்கியமான சந்திப்பாகக் கருதப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்