குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் கீழ் பலர் கைது

காவல் துறை மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் கீழ் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, நேற்று புதன்கிழமை(22) நிலவரப்படி,

30,213 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன். சந்தேகத்தின் பேரில் 699 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், 19 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய, நேரடியாக அடையாளம் காணப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கமைய 314 பேரும் திறந்த பிடியாணைகளுடன் 167 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுபோதையில் வாகனம் செலுத்திய 15 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 36 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மற்றும், பிற போக்குவரத்து குற்றங்களுக்காக 4,450 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை  ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.