பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் வியாபார நடவடிக்கைகள் மற்றும் முதன்மை வணிகச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக விதிக்கப்பட்டிருந்த தடையை மேலும் ஆறு மாதங்களுக்கு இலங்கை மத்திய வங்கி நீட்டித்துள்ளது.
இதன்படி, குறித்த நிறுவனத்தின் வணிக நடவடிக்கைகள் மற்றும் முதன்மை வணிகச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான தடை தொடர்ந்தும் அமலில் இருக்கும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.



