யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் மேய்ச்சலுக்குக் கட்டி நின்ற சுதேச இனக் கறுப்பு நிறப் பசு மாடு வெள்ளிக்கிழமை (01.05.2026) இரவு திருடிச் செல்லப்பட்டுள்ளது. இயற்கைவழிச் செயற்பாட்டாளரின் 80 ஆயிரம் ரூபா பெறுமதியான பசுமாடே இவ்வாறு திருடிச் செல்லப்பட்டுள்ளது.
மேற்படி திருட்டுச் சம்பவம் தொடர்பாக சனிக்கிழமை (02.05.2026) ஊர்காவற்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.






