பொன்னாலையில் நலம் தரும் நவரத்தினங்கள் நூல் வெளியீடு

யாழ்.பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலை அதிபரும், எழுத்தாளருமான திருச்செல்வம் தவரத்தினம் எழுதிய 60 ஆவது நூலான நலம் தரும் நவரத்தினங்கள் நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (03.05.2026) முற்பகல்-11 மணியளவில் பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலை மண்டபத்தில் ஓய்வுநிலை ஆசிரியர் சிவஸ்ரீ.கதிர் குமாரசாமி சுமுகலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.