வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு வெள்ளிக்கிழமை (21) தவிசாளர் சண்முகநாதன் ஜயந்தன் தலைமையில் நடைபெற்றது.
சபை அமர்வின் இறுதியில் யுத்தத்தின்போது உயிர்நீத்த உறவுகளை நிறைவுகூரும் விதமாக ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டு, மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த அஞ்சலி நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் மூன்று உறுப்பினர்களும் இணைந்திருந்துந்தனர். சபை அமர்வு நடைபெறும்போதே ஈபிடிபி உறுப்பினர்கள் இருவர் சபையில் இருந்து வெளியேறியதால் அவர்கள் அஞ்சலி நிகழ்வில் பங்கெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





