தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் இன்று(04.05.2026) தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன.
காலை 8 மணிக்கு அதிகாரிகள் தபால் வாக்குகளை எண்ணும் பணியை தொடங்குவார்கள் என கூறப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எண்ணும் பணி தொடங்கும்.
தொடர்ந்து மாலை 5 மணியளவில் இந்திய தேர்தல் ஆணையம் யார் வெற்றியாளர் என்ற அதிகார பூர்வ அறிவிப்புகளை வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் தபால் மூல வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிவை பெற்று வருகின்றது.
அதன்படி காலை 9:20 நிலவரப்படி தமிழக வெற்றிக் கழகம் 73 தொகுதிகளிலும் திமுக கூட்டணி 50 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 54 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.
தபால் மூல வாக்குகளின் படி தமிழக வெற்றிக் கழகம் 100 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 81 தொகுதிகளிலும் திமுக கூட்டணி 50 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.
தபால் மூல வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் 9:50 நிலவரப்படி தமிழக வெற்றிக் கழகம் 90 தொகுதிகளிலும் திமுக கூட்டணி 53 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 66 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.





